நூல் வாசிப்பு ஏன் முக்கியமானது, அது வாசகனை என்னவெல்லாம் செய்யும்...இன்றைய வாசிப்புப் பழக்கம் எதை நோக்கிச் செல்கிறது?-இவற்றையெல்லாம் எனது நண்பரும் திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் சமூக விலக்கல் துறையின் (social exclusion) தலைவருமான பேரா.வெ.பெ.ராமஜெயம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். பச்சையப்பன் கல்லூரி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களின் தயாரிப்பு அவர். எனது முன்னாள் இந்தியா டுடே சகாவும்கூட.