தமிழ் நாடக ஆளுமைகளில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் திரு ஏ.சீ. தாசீசியஸ் அவர்கள். அவர்களது நாடகப் பயணம் நீண்டதும் பல பரிமாணங்கள் கொண்டதும். அவரது ஆரம்ப நாடகப் பயணம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார், திரு தாசீசியஸ்.
இலங்கையில் தாழையடி என்னும் கிராமத்தில் பிறந்த திரு ஏ.சீ. தாசீசியஸ் சிறுவயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர். பேராதனை பல்கலைக் கழகத்திலும், அக்குவினாஸ் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் பின்னர் லயனல் வென்ற் நாடக அரங்கிலும் இவர் உயர் கல்வியும் நாடகத்துறையில் பயிற்சியும் பெற்றார்.
இவர் மேடையேற்றிய கோடை, புதியதோர் வீடு, பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், எந்தையும் தாயும் போன்ற நாடகங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. பல பரிசுகளும் விருதுகளும் பெற்ற இவர் சிறந்த நடிகனுக்கான தேசிய விருதையும், சிறந்த நாடகத்துக்கான விருதையும் இலங்கையில் பெற்றவர்.
லண்டனில் பிபிசிக்காக பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த சமயத்தில் ஐந்து மாதப் பயணத் திட்டத்தில் சென்னைக்கு சென்று அங்கு பயிற்சிப் பட்டறைகள் நடாத்தி நாடக உலகில் விழிப்புணர்வையும், புதிய பாதைகளையும் ஏற்படுத்தியவர். சுவிற்சலாந்தில் சலாமி என்ற நாடகத்தை தமிழ், ஜேர்மன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாக்கி முதன்முறையாக மேடை ஏற்றி சரித்திரம் படைத்தவர். இதைத்தொடர்ந்து சுவிற்சலாந்து அரசு அதனது 700ம் ஆண்டு நிறைவை கொண்டாடியபோது ஏ.சீ.தாசீசியஸ் என்னும் ஈழத் தமிழரை கலைத் துறை ஆலோசகராக நியமித்து கௌரவம் செய்தது.
One of the most prominent theater personalities of Tamil theatre is A C Tarcisius. His theatre journey has been long and meaningful. Kulasegaram Sanchayan talks to him about his journey.
Tacisius was born in a village, Thaalayadi, in the island of Sri Lanka. He got involved in theatre at a very early age, and continued to be involved in theatre most of his life.
His work in the island of Sri Lanka has been recognised by everyone. Tarcisius has worked for the BBC in London for more than ten years. The Government of Switzerland appointed him as one of the consultants to celebrate seven hundredth anniversary.[...]