இன்று பன்னாட்டு யோகா நாள் (International Day of Yoga). 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐக்கியநாடுகள் பொதுச்சபையில், ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. 177 நாடுகள் இந்தப் பரிந்துரையை ஆதரித்தனால், மூன்று மாதத்திற்குள், பன்னாட்டு யோகா நாள், June 21ம் நாள் என்று ஐக்கியநாடுகள் சபையால் தீரமானிக்கப்பட்டு, இந்த வருடம் முதல் தடவையாக International Yoga Day உலகின் பல பாகங்களிலும் அவதானிக்கப்படுகிறது.
யோகாசனம் பற்றித் தெரிந்தவர்களுக்கு ஒரு மீள்பார்வையாகவும், தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும், யோகா பயிற்சியாளர்களின் கருத்துகளுடன் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் யோகசக்தி என்ற பயிற்றும் கல்லூரியை நிறுவி, இயங்கிவரும் சி அண்ணாமலை அவர்களும் கோயம்புத்தூரில் ozone yoga என்ற பயிற்சிக்கல்லூரியை நடத்திவரும் Dr பாலகிருஷ்ணன் அவர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அத்துடன் சிறப்புவிருந்தினராக, 95 வயதிலும் யோகாசனம் தினமும் செய்து வரும் ஞானம்மாள் அவர்களது பார்வையையும் நிகழ்ச்சியில் சேர்த்து, தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்
June 21 was declared as the International Day of Yoga by the United Nations General Assembly on December 11, 2014. Yoga is a physical, mental and spiritual practice that originated over 6000 years ago in India. Yoga aims to integrate the body and the mind.
Kulasegaram Sanchayan talks to some experts in Yoga – C Annamalai of Chennai based Yogashakthi and Dr Balakrishnan of Coimbatore based Ozone Yoga.
A Yoga teacher and practitioner, even at the age of 95, Mrs Gnanammaal, also shares her life experience and provides some useful tips for Yoga enthusiasts