கருத்தாடல் I Karuththaadal
மூத்த அரசியல் விமர்சகர் மு. திருநாவுக்கரசு அவர்கள் CMR 101.3 FM க்கு வழங்கிய செவ்வி.
கருப்பொருள்: "இலங்கை அரசையும், சர்வதேசத்தையும் கையாளுதல் தொடர்பில், தமிழர்களுக்குள்ள தெரிவுகளும், தமிழ்த் தலைமைகளின் தவறுகளும்."
ஈழத்து அரசியற் கருத்தாளர்களில் மிக மூத்தவரும், "எழுத்து", "பேச்சு", "சிந்தனை" என்று முழுநேரமாக அரசியலை சுவாசித்துக்கொண்டிருப்பவர் மு. திருநாவுக்கரசு அவர்கள்.
அவருடைய "பத்திகள்", "உரைகள்" மற்றும் "கற்பித்தல்" என்பன அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கு அகராதிகளாக விளங்குகின்றன.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளரும், அரசியற்துறைப் பேராசானுமாகிய திருநாவுக்கரசு அவர்கள், பூமிப்பந்தின் மூலைமுடுக்கெல்லாம் இடம்பெற்ற அரசியற் சதுரங்க ஆட்டங்களை முன்னிறுத்தி, கேட்போருக்கு இலகுவில் புரியும்முகமாக, கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் மிக்க ஒருவர்.
ஊடகம் : CMR 101.3 FM, Toronto, Canada
திகதி : February 27, 2020