* ஜெபத்தைக் கேட்கிற தேவன் நமக்கு இருக்கிறார்.
* அவரை நாம் வேண்டிக்கொள்ளும்போது, அவர் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து நாம் வேண்டியதை நமக்கு அருளுகிறார்.
* ஜனங்களின் வாக்குறுதிகள் பொய்த்துப்போனதால் சோர்வுற்றிருக்கிறீர்களோ?
* அதிகாரத்தில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, நீங்கள் கொடுத்த மனுவிற்கான பதில் வரும்படிக்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்களா?
* உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க, ஒரு செல்வாக்கு நிறைந்தவர் இருக்கக்கூடிய கூட்டத்தைச் சந்திக்க மிகுந்த வாஞ்சையோடிருக்கிறீர்களா?
* ஜனங்களைப் பொருத்தமட்டில், உதவியும் உறுதுணையும் இந்தவொரு நபரிடமிருந்து வரும் என்று எந்த நிச்சயமும் கிடையாது. என்றாலும் சில நேரங்களில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். மற்றெல்லா நேரங்களிலும் உதவி பெற முடியாது.
* நமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற நிச்சயத்தைக் கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில், நாம் ஏமாற்றங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.
அன்பு நண்பரே,
* இப்படிப்பட்ட சூழ்நிலையின் வழியாய் நீங்கள் சென்றுகொண்டிருந்தால்,
* எப்போதும் சார்ந்துகொள்ளக்கூடிய , நம்பத்தக்க தேவனிடத்தில் உங்கள் கண்களைத் திருப்புங்கள்.
* அவர் இயேசு. அவர் உங்களை ஏமாற்றுவதில்லை.
* உங்களுக்குள்ளும் உங்களுக்காகவும் அவர் கிரியை செய்வார்.
* அவர் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் நேர்த்தியாய்ச் செய்வார்.
* அவர், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் செவிகொடுக்கிறார். அவர் நிச்சயமாய்ப் பதிலளிப்பார்.
* தம்முடைய பிள்ளைகள் தம்மை நோக்கிக் கதறும்போது அவர் அவர்களைப் புறம்பே தள்ளுவதில்லை.
* உறுதியோடு ஜெபம்பண்ணுங்கள். தேவன் பதிலளிப்பார். ஏனென்றால் அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.