அன்பு தேவ பிள்ளைகளே, * தேவன், உங்களைப் பாவம், மற்றும் சாத்தானின் பிடியிலிருந்து விடுவித்திருக்கிறார். ஆனால் அவருக்காக வாழ்ந்து, அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றியாக வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். * நம்முடைய தேவன் பரிசுத்தர், ஆகையால் நாமும் பரிசுத்தராய் இருக்க வேண்டும். * அவர் தம்முடைய இரத்தத்தினால் நம்மைப் பரிசுத்தப்படுத்தியுள்ளார். * இப்போது, அதற்குப் பதிலீடாக, பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நாம் அவரை மகிழ்விக்கவேண்டும். * தேவன் நம் பணத்தையும் செல்வத்தையும் எதிர்பார்க்கவில்லை. * ஆனால், உலகப் பொக்கிஷங்களை விட விலையேறப்பெற்றதொன்றை அவர் எதிர்பார்க்கிறார். அது, அவருக்காக நாம் ஜீவபலியாய் வாழ்வதாகும். * பரிசுத்த வாழ்க்கை வாழ்வதென்பது எளிதானது அல்ல. அதை அடைய, அநேகத் தியாகங்கள் தேவை. * நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள், உங்கள் விடுதலைக்காக அவர் செய்த தியாகத்தை மேன்மையாய்க் கருதுகிறீர்கள் என்றால், உங்கள் பரிசுத்த வாழ்வுக்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் தியாகம் செய்ய நீங்கள் ஆயத்தமாய் இருப்பீர்கள்.