களத்தில் 164 உயிர்களை பலி கொடுத்த போதிலும், உறுதியோடு நின்ற மக்கள் தங்கள் போராட்டத்திலும், கோரிக்கையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் அரசாங்கங்கள் எப்போதெல்லாம் முடிவெடுக்கிறதோ அப்போதெல்லாம் சாமானிய மக்கள் கிளர்ந்து எழுந்து அரசை மண்டியிட வைப்பார்கள் என்பதற்கு தில்லி விவசாயிகள் போராட்டமும், கஜகஸ்தான் மக்களின் எழுச்சியும் சான்றாகவே அமைந்துள்ளன.