தலைவர் கலைஞர் அவர்களது பெருமுயற்சியால் அன்றைய பாரதப் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் மண்டல் கமிசன் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் அறிந்ததே. மண்டல் கமிசன் சிபாரிசினை ஏற்று அரசியல் சட்டப்பிரிவு 16(4)ன்படி, மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 27 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கப்பட்டது.
இதனை முன்னிட்டுத் தான் பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசுக்கு, அளித்து வந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டு.வி.பி.சிங் ஆட்சியே கவிழ்ந்தது.
இந்த மண்டல் கமிசன் 27 சதவிகித இட ஒதுக்கீட்டின்படிதான் பிற்படுத்தப்பட்டவர்களால் கூடுதலாக ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிந்தது.
மத்திய அரசின் அனைத்து பிரிவுகளிலும் இன்றைக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் இந்தியா முழுவதும் ஏராளமானோர் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.