சிலை செய்வது ஒரு உயிர் கொடுக்கும் வேலை. சல்லியக்கிரியை செய்யும் மருத்துவர்கள் எப்படி கையை அறுத்து கட்டியை எடுத்துவிட்டு உள்ளுக்குள் மருந்து வைத்து தோலைத் தைப்பார்களோ, மயக்கமுற்றவர் கண்விழிக்கும் வரை எப்படி பதறிப்பதறி அவனையே பார்த்துக் கொண்டிருப்பார்களோ, அது போன்ற நிலைமை தான் உலோக ஆச்சாரிக்கும் இருக்கும்.