பிரிந்து தான் ஆக வேண்டும். வாழை மரத்திலிருந்து கன்றுகள் பிரிந்து வளர வேண்டும். ஒரு மரத்தின் கிளைகள் நன்றாகத் தள்ளி, பிரிந்து தான் வளர வேண்டும். ஒட்டியே வளர்ந்தால் வளர்ச்சி தடைப்படும். அது கிளைக்கும் நல்லதல்ல, மரமும் பாழ்படும். நீ பிரிந்திருப்பது என்பது வேறு, பிளவு என்பது வேறு. நீ பிரிவது பற்றிப் பேசுவதை இங்கு சிலர் பிளவுபடுத்த நினைப்பார்கள். எச்சரிக்கையாக இரு.