நிசும்பசூதனி கோயிலில் கூட்டம் அதிகரித்தது. போருக்குப் போயிருக்கும் தன்னுடைய கணவன் மார்களும், தமையன் மார்களும், சிற்றப்பன்களும், பெரியப்பன்களும், தகப்பன்களும், மகன்களும் எந்தவித ஊறும் நேராமல் மீண்டு வர வேண்டுமென்று பிரார்த்தனை செய்தபடி, நோன்பு இருந்தபடி பல மறக்குல மங்கையர்கள் கோயிலில் சுற்றிச்சுற்றி வந்தார்கள். மண்டபத்தில் தவமிருந்தார்கள்