அரசரையா திருமணம் செய்து கொள்ளப் போகிறாய். முடியுமா. நீ வெறும் ஆட்டக்காரிதானே. உன்னால் பட்டமகிஷி களுக்கும், மற்ற மனைவிகளுக்கும் ஈடு கொடுக்க முடியுமா. வெறுமே வேலைக்காரியாகி விடுவாயோ என்று பயமாக இருக்கிறதடி. பட்டமகிஷியின் துணி துவைத்துப் போட்டு உலர்த்தி எடுத்து வருகிற பெண்ணாய்ப் போய் விடுவாயோ, அரசர் இருக்குமிடம் சுத்தம் செய்கின்ற வேலைக்காரியாய் போய் விடுவாயோ என்று பயமாக இருக்கிறது." என்று விம்மினாள்.