சோழர்களின் முன்னோர் விஜயாலயன் என்பவன் தஞ்சையைச் சுற்றி காளிகோயில்கள் அமைத்ததும், சாக்த உபாசகத்தில் ஈடுபட்டதும்தான் சோழதேசத்தின் சிறப்புக்குக் காரணம் என்று ஜோசியன் சொன்னான். எட்டு திக்கிலும், எட்டு கோயில்கள் அமைத்து அதில் நிசும்ப சூதனியை மிகவும் கொண்டாடி, சாக்த வழிபாடு செய்ததின் மூலம் பெண்களின் நிலையை உயர்த்தி தேசம் செழிப்பாகி விட்டது என்கிறார்கள். ஆறு தலைமுறைக்கு முன்னரே இதற்கு விக்கிடப்பட்டது என்கிறார்கள். எந்த இடத்தில் சாக்த பூஜை செய்கிறார்களோ, அங்கு பெண்கள் உயர்த்தப் படுவார்கள்