கடவுளே... கடவுளே... தென்னாடுடைய சிவனே, என் பரம ஸ்வாமியே, கங்கையை நேரத்திற்குக் கொண்டு வந்து, நீ எடுப்பித்த கோயிலை உறுதி செய்து கொள்கிறாயே. என்னுடைய சிறு தொண்டை அங்கீகரிக்கிறாயே இந்த கும்பாபிஷேகம் மிக நன்றாக நடக்கும் என்று கோடி காட்டுகிறாயா. புனித நீருடன் வரும் மரூவூர் அந்தணர்களுக்கு குடந்தையில் எல்லா மரியாதைகளும் நடைபெறட்டும். நமது வழக்கபடி சகல வாத்தியங்களோடும், வேத கோஷங்களோடும் அவர்களை குடந்தை மாநகருக்குள் அதிகாரிகள் வரவேற்கட்டும்.