சக்ரவர்த்தி அவர்களே... மறுபடி சொல்கிறேன். இதற்கு நீங்கள்தான் காரணம். சோழதேசத்தில் எந்த சக்ரவர்த்தியும் இவ் வளவு நெருக்கமாக மக்களிடம் பழகியதே இல்லை. அதே சமயம் எந்த சக்ரவர்த்தியும் இவ்வளவு பெரிய கோயில் ஒரு எழுப்பியதும் இல்லை இந்தக் கோயில் ஒரு அற்புதம் என்றால், இந்தக் கோயில் உங்கள் கனவு என்றால், இந்தக் கோயில் உங்கள் முயற்சி என்றால், பஞ்சவன் மாதேவி நிச்சயம் பிழைத்துக் கொள்வார்கள். சிவன் உங்களுக்கு நிச்சயம் கருணை செய்வார்.