சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் மேலைச் சாளுக்கியத்திலிருந்து மறுபடியும் தஞ்சைக்கு வந்து பெருங்கோயில் கட்டி, பெரும் புகழோடு வாழ்வதற்காகவும், சோழ தேசத்தின் கீர்த்திக்காகவும் இந்த காரிப்பெருங்கணை நவகண்டம் கொடுக் கிறான்... நவகண்டம் கொடுக்கிறான்... நவகண்டம் கொடுக் கிறான்." என்று உரக்கச் சொல்லி, குனிந்த முகம் நீரில் பட இருக்க, அவன் வலக்கை சரக்கென்று வாளை எடுத்து வேகமாகச் சுழற்றி கழுத்தில் அடித்துக் கொண்டது.