'ஜன நாயகன்' வெளியாகாத காரணத்தால் அந்த கோபத்தை விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது காட்டுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த சுதா கொங்கரா, "அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, மிக மோசமான வகையிலான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடக்கின்றன. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கே தெரியும். இத்தகைய செயல்கள் "ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.