அவினாசி, அமுதம் அச்சகம், மணிவாசகன் அண்ணா பாடியது.
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !
எங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.
அருட்பெரும்ஜோதி வள்ளலார் கண்ட மெய்பொருள் வள்ளலார் யார்? அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் ▼
வியாழன், 24 டிசம்பர், 2020
பாடுபட்டீர் பயன் அறியீர் !
*பாடுபட்டீர் பயன்அறியீர்*
ஒவ்வொருவரும் பிறந்து வளர்ந்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதற்காக பொருள் சம்பாதிக்க ஏதாவது ஒருவகையில் இடைவிடாது உழைக்கின்றோம் பொருள் ஈட்டுகிறோம் அதன் பலனை *தேக சுதந்திரத்திற்காகவும் போக சுதந்திரத்திற்காகவும் ஜீவ சுதந்திரத்திற்காகவும் மட்டுமே படாதபாடுபட்டு உழைத்து அனுபவிக்கிறோம்.*
*ஆன்ம சுதந்திரத்திற்காக உழைக்க தவறிவிடுகிறோம்*
உயிரையும் உடம்பையும் அழிக்காமல் பாதுகாக்க ஆன்ம சுதந்திரம் அவசியம் தேவை.ஆன்ம சுதந்திரம் பெற்றால் தான் அருள் சுதந்திரம் பெறமுடியும் அருள் சுதந்திரம் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.மரணத்தை வென்றால் தான் கடவுள் சுதந்திரம் பெறமுடியும்.கடவுள் சுதந்திரம் பெற்றால் மட்டுமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக ஆபமுடியும்.
*உழைப்பே உயர்வுக்கு வழிகாட்டும் !*
*நாம் உழைக்கும் உழைப்பு எதுவாக இருந்தாலும் நம் உயிரையும் உடம்பையும் காப்பாற்ற வேண்டும்*.
உயிரையும்
உடம்பையும் காப்பாற்றாத உழைப்பு வீண் விரையமான உழைப்பாகும்.
*வள்ளலார் பாடல்.* !
காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டெருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெலாம் போதும் இது பரமர்
வருதருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்
எண்மை உரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.!
*பாடலின் விபரம்*!
அடர்த்தியான மேடுபள்ளமான பெரிய காடு. அகற்ற சிரமமான பெரிய சிறிய பாறைகள் மற்றும் சிறிய பெரிய கற்கள் மேடுபள்ளமான மண்குவியல்கள். கரடுமுரடான அடர்த்தியான மரம் செடிகொடிகள் முட்கள் நிறைந்த மரங்கள் மற்றும் எதற்கும் பயன் படாத நெருக்கமான புதர்கள் நிறைந்த இடத்தை *ஒரு அறிவுள்ள மனிதனிடம் ஒப்படைக்கப் படுகிறது.*
அந்த மனிதன் அந்த இடத்தை தனது அறிவு கூர்மையுடன் பல திறமையான ஆட்களின் உடல் வலிமைக்கொண்டும் பல பெரிய சிறிய கருவிகளைக் கொண்டும் எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த இடத்தில் தேவை இல்லாததை அனைத்தையும் அகற்றி மற்றும் கருவிகளைக் கொண்டு சமப்படுத்தி.
பன்படுத்தி பயன்படுத்தியும் *நன்செய் பயிர் வைக்கும்* அளவிற்கு இயற்கையான காட்டு எருவும் போட்டு நன்செய் பயிரிடும் நிலமாக கொண்டு வந்துவிட்டார்.
மேலும் ஆழ்கிணறு தோண்டி நன்செய் விவசாயம் செய்வதற்குண்டான வற்றாத தண்ணீர் கிடைக்கும் அளவிற்கும் செய்துவிட்டார்.
இவ்வளவு பெரு முயற்சிசெய்து அறிவுபூர்வமாக அழகுபடுத்தி விட்டார். அனைத்து மக்களுக்கும் பயன்படும் நெல் கரும்பு வாழை வெற்றிலை போன்ற நன்செய் பயிர் வைக்கும் அளவிற்கு கொண்டுவந்துவிட்டார்.
இவ்வளவு பாடுபட்டு உழைத்து அனைவருக்கும் பசியைப்போக்கும்.சாத்வீக உணவு கிடைக்கும் நன்மைதரும் பயிரான *நன்செய் பயிர் வைக்காமல். *கடுகு என்னும் விஷப்பயிர் விதைத்து எவருக்கும் பயன் இல்லாமல் செய்துவிட்டார்*.
இதைத்தான் வள்ளலார் காடுவெட்டி நிலம் திருத்தி காட்டுஎருவும் போட்டு கரும்பை விட்டு கடுகு விதைத்து களிக்கின்ற உலகீர். பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர் என்று சொல்கிறார்.
*அதேபோல்* கஷ்டபட்டு கிடைத்த மனித்தேகம்.
*மனிதபிறப்பு உயர்ந்த பிறப்பு!*
எல்லாம்வல்ல தனித்தலைமைப் பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் தமக்கு சம்மான ஆன்மாவை இந்த பஞ்சபூத உலகிற்கு அனுப்பி தாவரம்.ஊர்வன.
பறப்பன
நடப்பன.அசுரர். தேவர் போன்ற ஆறு வகையான பிறப்பைக் கொடுத்து அவைகளுக்கு உண்டான துன்பம்.துயரம்.
அச்சம். பயம்.மரணம் போன்ற துன்பங்களை இடைவிடாது கொடுத்து. அவைகளை சிரமம் பாராமல் அனுபவித்து அந்த ஆறு பிறப்புக்கள் ஒவ்வொன்றிலும் கடினமாக உழைத்து முழுமையாக தேர்ச்சி பெற்று. இறுதியாக உயர்ந்த அறிவாகிய *ஏழாவது பிறப்பாகிய மனிததேகம் இறைவனால் கொடுக்கப்பட்டது*.
மனிதர்களுக்கு உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டதின் நோக்கமே.
*எல்லாம்
வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்* தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்பசித்தி பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே மனித தேகம் கொடுக்கப்பட்டதின் நோக்கமாகும்.
*அருள் பெறவேண்டிய மனிதகுலம்*
*மனிததேகமானது அருளைப்பெற்று இறைநிலையை அடையாமல் பொருளைப்பெற்று பிறந்து பிறந்து.இறந்து இறந்து