வாழ்- சாராம்சத்துக்கு முன் தோன்றாத இருப்புக்களின் திரை வெளி: இளவேனில்
இன்றைய மெய்நிகர் உலகில் பயணம் என்பது ஊதி பெருக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இங்கு பயணம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் அனைத்தும் இன்பச் சுற்றுலாக்களே. ஒரு புதிய நிலத்தின் அனுவங்களை பெறாத எந்த ஒரு பயணமும் பயணமாக கருத முடியாது என்றே நினைக்கிறேன். பயணத்தில் அனுபவம் முதலிலும், காசு கடைசியாகவும் முக்கியத்துவம் கொள்கிறது. இன்பச் சுற்றுலாவுக்கான அடிப்படைகளாக காசு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் காசுக்கு ஏற்ப உங்களால் சுற்றுலா செல்ல முடியும் – ஊர் , மாநிலம், நாடு, கிரகம் இப்படி.