திருமந்திரம் – குரு விளக்கம்
குருட்டினை நீக்கா குருவைக் கொள்வர்
குருட்டினை நீக்கும் குருவைக் கொள்ளார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி வீழுமாறே
குரு = இருட்டை நீக்கும் ஒளி = ஆன்ம ஒளி – ஆன்மா
குரு = திருவடி ஒளி
எல்லவருக்கும் தத்தம் ஆன்மாவே குரு ஆகும்
ஆன்மா சாதனத்தில் நமக்கு வழி காட்டும் – புற குரு ஏமாற்றினாலும் அக குருவாகிய ஆன்மா ஏமாற்றாது என்பது உண்மை
கருத்து : இருளை , மாயா மலங்களை நீக்கும் குருவாகிய ஆன்மாவைக் கொள்ள மாட்டார் உலக மக்கள் . முடிவில் இரு குருடுகளும் மரணம் என்னும் குழியில் வீழ்வர்
ஆன்மாவுக்கு மரணம் என்பது கிடையாது
ஆன்மாவைக் குருவாக கொண்டால் மரணம் கிடையாது
Thoughts without content are empty, intuitions without concepts are blind.
Immanuel Kant,