Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Ramanan's Podcast:How many episodes does Ramanan's Podcast have?The podcast currently has 96 episodes available.
April 08, 2022நம்பிக்கை இருக்குமிடத்தில் விதிக்கு வேலையில்லை!.நம்பிக்கை இருக்குமிடத்தில் விதிக்கு வேலையில்லை!.நம்பிக்கை எதிர்பார்ப்பை வளர்க்கிறது. ஆனால், நம்பிக்கை உங்கள் இயல்பாக மாறும்போது ஒரே பாதையில் திடமாக செல்ல முடிகிறது. நம்புவது என்பது ஒரு செயலல்ல. நீங்கள் அந்தத் தன்மையாகவே மாறுவது. இது ஓர் உள்நிலை அனுபவம். இந்தப் பாதையில் செல்லும்போது, வளர்ச்சி என்பது அடிமேல் அடியெடுத்து வைக்க அவசியமின்றி ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும்....more11minPlay
April 05, 2022துணிவு வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானது .உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது – வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானது துணிவு . நடக்கக்கூடாது என்று எதை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்களோ அந்தக் கெடுதலை எதிர்த்து நிற்க மனதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். “ வாழ்க்கையில் எந்த துன்பங்கள் வந்தாலும், எதிர்த்து நின்று வெற்றி பெறும் மன துணிவு வேண்டும்...more11minPlay
April 05, 2022வாழ்க்கையில் எந்த துன்பங்கள் வந்தாலும், எதிர்த்து நின்று வெற்றி பெறும் மன துணிவு வேண்டும்உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது – வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானது துணிவு . நடக்கக்கூடாது என்று எதை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்களோ அந்தக் கெடுதலை எதிர்த்து நிற்க மனதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். “ வாழ்க்கையில் எந்த துன்பங்கள் வந்தாலும், எதிர்த்து நின்று வெற்றி பெறும் மன துணிவு வேண்டும்...more11minPlay
April 03, 2022மாற்றம் என்பது எமக்கு புதிய புதிய வாசல்களை திறந்து விடும் அதன் மூலமான பல வாய்புகளையும் சந்தரப்பங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.மாற்றம் ஒன்றே மாறாதது .. வாழ்கையில் மாற்றம் வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும். எமது மனநிலை மாறவேண்டும். இப்போதிருக்கின்ற நம்மை நமது செயல்பாடுகளை நாம் மாற்றியமைக்க வேண்டும். மாற்றம் என்பது அச்சமூட்டக் கூடியது அது வலிதரக் கூடியது அதே போல் நாம் வாழ விரும்பும் ஒரு வாழ்வை மாற்றம் மட்டுமே எமக்குப் பெற்றுத்தந்து விடும். ஆம் மாற்றம் என்பது எமக்கு புதிய புதிய வாசல்களை திறந்து விடும் அதன் மூலமான பல வாய்புகளையும் சந்தரப்பங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். நாங்கள் எங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற போதே எம்மைச் சுற்றியிருக்கின்ற அனைத்தும் மாற்றமடையும். மாறாக எம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் மாறும் வரை நாம் காத்திருந்தால் எதுவும் நடந்துவிடாது. மாற்றம் என்பது எம்மில் இருந்து தொடங்க வேண்டும்.See less...more11minPlay
March 31, 2022உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் சந்தோஷம் நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும்.மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். மகிழ்ச்சி என்பது மன நிறைவே. உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் முடியும். மனதை அழுத்தம் செய்யும் செயல்கள் யாவும் தானாய் அமைவது இல்லை நாமே தேடி வலையில் விழுகிறோம். இதை தவிர்க்க வேண்டும். இயல்பாக இருந்தாலே சந்தோஷம் நம்மிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும். ...more9minPlay
March 31, 2022மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது.மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். மகிழ்ச்சி என்பது மன நிறைவே. உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் முடியும். மனதை அழுத்தம் செய்யும் செயல்கள் யாவும் தானாய் அமைவது இல்லை நாமே தேடி வலையில் விழுகிறோம். இதை தவிர்க்க வேண்டும். இயல்பாக இருந்தாலே சந்தோஷம் நம்மிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும். ...more11minPlay
March 29, 2022ஆவணப்படுத்தல் மூலம் வரலாற்றையெல்லாம் அடுத்த தலைமுறைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்வரலாறு என்பது பல ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல. நேற்று நடந்ததும் இப்ப நடந்து கொண்டிருப்பதும் வரலாறு தான். ஆவணப்படுத்தும் தேவை இன்று மிக முக்கியமானது. நிறைய விடயங்கள் குறுகிய காலத்தில் அழிந்து போகக்கூடியதாக இருப்பதால் ஆவணப்படுத்தலில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.தனி ஒருவர் வாழ்விலும் சரி, ஒரு சமூக அளவிலும் சரி, ஒரு அரசாங்கத்தாலும் சரி, ஒட்டு மொத்த இனத்தின், அடையாளத்தின் எதிர் காலத்தை, உறுதி செய்வது ஆவணங்களும், ஆவணப்படுத்தலுமே. பாதுகாக்கப்படாமையால் மட்டுமல்லாமல் கவனிக்கப்படாமையாலும் பல ஆவணங்கள் அழிந்து வருகின்றன. ஒரு வரலாறு எதிர்காலத்தில் எழுதப்படுகையில் எல்லாவிதமான ஆவணங்களும் பயன்படும். தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம் .எதிர்காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உணரப்படும்.சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தனமையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும்.ஆவணப்படுத்தல் மூலம் அவற்றையெல்லாம் அடுத்த தலைமுறைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்See less...more10minPlay
March 25, 2022நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான்.நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ என்கிறார் பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் டிரைடென். ‘இதைச் செய்யலாமா… அதைச் செய்யலாமா?’ என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் (சாய்ஸ்) இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும். நாம் எதைச் சிந்திக்கிறோமோ… அதுவே செயலாகிறது; நாம் எதைச் செய்கிறோமோ… அது வழக்கமாகிறது; நாம் எதை வழக்கமாக வைத்திருக்கிறோமோ… அது நம் குணாதியசமாகிறது. எனவே, நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான். நல்ல பழக்கங்கள் நம் வசமாக, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம்.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றும் அல்லது பின்பற்ற நினைக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் என்னென்ன?See less...more11minPlay
March 24, 2022கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.See less...more26minPlay
March 24, 2022. வெற்றிப் படிகட்டுகளில் ஏறுவதாக இருந்தாலும் சரி, சரிவு பாதையில் செல்வதாக இருந்தாலும் சரி, எடுக்கும் முடிவுகள் மட்டுமே காரணம்.முடிவு எடுக்கும் திறமை என்பது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலை களிலும் சரியானதாக அமையுமா என்பது சந்தேகமே. ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே அமையும். வெற்றிப் படிகட்டுகளில் ஏறுவதாக இருந்தாலும் சரி, சரிவு பாதையில் செல்வதாக இருந்தாலும் சரி, எடுக்கும் முடிவுகள் மட்டுமே காரணம். எனவே தான் முடிவு எடுத்தல் என்பது ஒரு கிரியா ஊக்கியை போல செயல்படுகிறது....more9minPlay
FAQs about Ramanan's Podcast:How many episodes does Ramanan's Podcast have?The podcast currently has 96 episodes available.