உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை,"
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவையான உணவை வீணாக்குகிறான்.
நாம் இங்கு உணவுகளை வீணாக்கும் அதே நேரம், எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் எல்லா நிலைகளிலும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம். 82 கோடி மக்களுக்கும் மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
உணவு வீணாதல் இன்றைய தினம் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனையாகும். உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகி விடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாம் வீணாக்குவது ஒரு தானியத்தை மட்டும் என்று நினைத்தால் அது தவறு. அந்த தானியம் விளையப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், நிலம், விவசாயியின் உழைப்பு, உரம், அறுவடை செய்து கடைக்கு வரும் வரையிலான பல தொழிலாளர்களின் உழைப்பும் அந்த தானியத்தோடு சேர்ந்து வீணாகிறது .
உணவை வீணாக்காமல் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.