#பாலக_வீதி_17
#வான்
வான் எனும் சொல் தமிழில் #வானம் எனவும் வழங்கப்படும்.
வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும் போது அது மழையைக் குறிக்கிறது.
உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக வரும். அந்தப் பொருளின் பெருமதிப்பு, அழகு, உயரம் அல்லது மிகுதி போன்ற பண்புகளைக் குறிக்கிறது.
வான் என்னும் சொல் உணர்த்தும் பண்புப் பொருள்களை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காணலாம்.
திருக்குறள்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று (திருக்குறள்)
திருக்குறள் வான் சிறப்பு – கரந்துறையில்
11.
அமுது அது
அ – அனைத்திற்கும் மழை
மு – முற்றிலுமாக து – துணையாக அமைந்து
அ- அனைத்து உயிரையும் து – துளிர் விடச் செய்யும்.
அனைத்து உயிர்களுக்கும் மழை நீர் அமிழ்து என உணர்வோம்.
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுணரல் பாற்று.
714. அவை அறிதல் திருக்குறள்
714 ஒளியார் முன் அறிஞராகுக;வெளியார் முன் குறைந்த அளவே. தெரிந்தவராகியிரு.
அறிந்தவர் முன் அறிஞர் ஆகுக;வெளிப்படையாக தெரியாதவர் முன் வெண்மை வண்ணம் கொண்டவராயிரு.
In front of Scholars be a scholar; When in front of others be a lesser known person.
714.
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.
தொல்காப்பியம் 2-292
உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,பெயரினும் வினையினும் மெய் தடுமாறி ஒரு சொல் பல்பொருளுக்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருளுக்கு உரிமை தோன்றினும் பயிலாத அவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபின் சென்று நிலை மருங்கின் எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்.
—
வான்கோல் இலங்குவளை அகநானூறு 261
அகநானூறு 261-ஆவது பாடலில் வரும் ‘வான்கோல்’ என்ற சொல்லிற்கு ‘வெண்மையான திரண்ட வடிவம்’ அல்லது ‘வெண்மையான கொம்பு போன்ற நீண்ட வடிவம்’ என்பது பொருள்.
இப்பாடலில் இச்சொல் சங்கு வளையல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது:வான்: வெண்மை (சங்கின் நிறம்).கோல்: திரண்ட அல்லது நீண்ட வடிவம் (வளையலின் வடிவம்
அகநானூறு 261-ஆவது பாடல் (மணிமிடை பவளம்), பாலை பாடிய பெருங்கடுங்கோவால் பாடப்பட்ட பாலைத் திணைப் பாடல் ஆகும். இப்பாடலில், தலைவன் பிரிவின்போது தலைவியின் வளையல்கள் கழன்றன என்பதை உணர்த்த, “வான்கோல் இலங்குவளை தெளிர்ப்ப” (ஒளி வீசும் வளைகள் கழன்று ஒலிக்க) என்ற வரி தலைவியின் மெலிவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
—-வான்கழல் :
குறிஞ்சிப்பாட்டு125- 126-127
நுண் வினைச் கச்சைத் தயக்கு அறக் கட்டி
இயல் அணிப் பொலிந்த ஈகை வான்கழல்
துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ
#ஈகை_வான்_கழல்: கொடையாளிக்குரிய அல்லது வீரத்தைப் புலப்படுத்தும் வெண்மையான வீரக் கழல்.
பொருள்:வீரன் ஒருவன் கச்சை மற்றும் கழல்களைக் கச்சிதமாக அணிந்து கம்பீரமாக நடை பயின்று வருவதைக் குறிக்கிறது.
பாலக வீதி
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.