மெட்ராஸ் அல்லது சென்னை என்ற நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறுவப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு சென்னை நகரம் 375 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததை சிறப்பிக்கும் வகையில் நடந்த சென்னை தின ஒருங்கிணைப்பாளர்கள் - வரலாற்றாசிரியர் S. முத்தையா, சமூக செய்தித்தாள்களை இயக்கி வரும் வின்சன்ட் டீ சொய்சா, மற்றும் ரேவதி ராம் அவர்களுடன், சென்னையில் நிகழ்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட நல்லி குப்புசாமி, தபால்துறை அதிகாரி S C பீமா ஆகியோர் மற்றும் சில சென்னைவாசிகள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குச் சொன்ன கருத்துகளுடன் நிகழ்ச்சி தயாரித்தவர் குலசேகரம் சஞ்சயன். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.