செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய முன்னணிக்கு இந்தியாவைக் கொண்டு செல்லும் நோக்கில், India AI Impact Summit 2026 என்ற மாநாடு கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு பயணத்தின் திசை மற்றும் தாக்கங்களைப் பற்றி முக்கியமான விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்தப் பின்னணியில், செயற்கை நுண்ணறிவு (AI), மேம்பட்ட பகுப்பாய்வு (Advanced Analytics), மற்றும் சமூக மற்றும் சமூக-தொழில்நுட்ப அமைப்புகள் (Social & Socio-technical Systems) ஆகிய துறைகளில் பயிற்சியாளராகவும், ஆராய்ச்சியாளராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருபவரும், University of Technology Sydney (UTS) பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருபவருமான முனைவர் ஞான பாரதி அவர்களுடன், குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.