நம் நாட்டில் கோடை காலத்தில் வெப்பமான நாட்கள் அதிகரித்து வருகின்றன. சூடான நாட்களில் மருந்துகள் விரைவில் கெட்டுப் போகலாம் என்றும் சில மருந்துகள் உங்கள் உடலின் வெப்பநிலையைப் பாதிக்கலாம் என்றும் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. உடலில் இருந்து தண்ணீர் இழப்பு, உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க முடியாமை, சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால், சில பொதுவான மருந்துகள் வெயிலில் உடலை குளிர்விக்கச் சிரமப்படுத்தி வாழ்க்கைக்குத் தடை விளைவிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சூடான நாட்களில் கடுமையான உடல்நல அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் லித்கோ நகரில் மருந்தகம் ஒன்றை நடத்தும் மருந்தாளுநர் கோபிகா ஸ்ரீகாந்தனிடமிருந்து சில குறிப்புகள் மற்றும் தந்திரங்களைக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.