கல்குதிரை என்ற சிற்றிதழை நிறுவி அதனை நிர்வகிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றும் கோணங்கி, காத்திரமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அண்மையில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினர் விளக்கு விருது வழங்கி கோணங்கிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள். புதுமைப்பித்தன் நினைவாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விளக்கு விருதை இது வரை வாங்கிய பதினேழு எழுத்தாளர்களுடன் கோணங்கியும் இணைந்து கொள்கிறார்.
பல சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துள்ள கோணங்கியின் ஆளுமை விசாலமானது. ஒரு நேர்காணலில் அவரது முழு பரிமாணத்தையும் நாம் கண்டுகொள்ள முடியாது. இருந்தாலும் அந்த முயற்சியில் ஒரு சிறு பங்காக, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் வழங்கும் இந்த நேர்காணல், கோணங்கியின் எழுத்துலகம் பற்றியும் அவரது பார்வை பற்றியும் ஒரு சிறு அறிமுகமாக அமைகிறது.
இரண்டு பகுதிகளாக இணையத்தில் பிரசுரமாகும் நேர்காணலின் முதல் பகுதியில், கோணங்கியின் பின்னணி, அவரை எழுதத் தூண்டியவர்கள், மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பன குறித்து அறிந்து கொள்கிறோம்.
Konangi is the founder and managing editor of a Tamil journal, Kalkuthirai (Stone horse), and a reputed writer in Tamil
Recently, The Vilakku Literary Society run by friends of modern Tamil literature living in the United States has honoured Konangi with their annual award dedicated to the promotion of the understanding of modern Tamil literature.
One interview alone cannot do justice to Konangi. Yet, our presenter Kulasegaram Sanchayan tries to bring the essence of this author of Tamil novels and short stories.
In the first of a two-part interview published on the Internet, we bring to you Konangi’s background, his instigators, and his views on translating literary work.