தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் நேரடிக் கண்காணிப்பில் நூற்றுக்கணக்கான சிற்பிகள், பல ஓவியர்களின் கூட்டு உழைப்பில் உருவான முற்றத்தின் சிற்பங்களின் பிரமாண்டம் பிரமிப்பூட்டும் அதே சமயம், மனதின் ஈரத்தைக் கசியவைக்கும் தமிழர் வரலாற்றின் நினைவு முற்றம், முள்ளிவாய்க்கால் முற்றம்.
முற்றத்தின் நடுவில், 40 தொன் எடையுள்ள தமிழ்ப் பாவையின் சிற்பப் பீடம். அதன் இரு பக்கங்களிலும் தமிழரின் அவலத்தையும், தமிழர்களின் உயிர்த் தியாகத்தையும் கற்சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். தமிழ்ப் பாவை சிற்பத்தின் பீடத்தினுள் பார்ப்பவர் முகத்தைப் பிரதிபலிக்கும் முப்பரிமாணக் கண்ணாடி.
வெள்ளையர்களை எதிர்த்த தமிழ் மன்னர்களில் ஆரம்பித்து மொழிப் போர் தியாகிகளின் படங்களோடு தொடர்ந்து, அண்மைக்கால நிகழ்வுகள் பற்றியும் அடங்கிய வரலாற்று ஆவணம் இது.
இந்த முற்றத்தின் ஆரம்பவிழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதமன், முற்றத்தின் நடுவிலேயே நின்று கொண்டு அது குறித்து எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அதுபற்றிப் பேசுகிறார்.
Under the direct supervision of the leader of Tamil Nationalist Movement, Pazha Nedumaran, hundreds of sculptors and artists have worked together to create a grand courtyard of magnificent sculptures to illustrate Tamil history and valour – Mullivaikkaal Mutram. The Mutram was declared open on Wednesday November 7, 2013.
Director Gowthaman talks to our producer, Kulasegaram Sanchayan, and gives an overview about the opening of the Mutram.