அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 20 சதவீதமானோர் (19.2% பேர்), சோகம், கோபம், பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணரும்போது ChatGPT, Gemini, Character.AI மற்றும் Meta AI போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) chatbotsஐப் பயன்படுத்தி ஆலோசனை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டில் இந்த அளவு 13.1% ஆக இருந்தது; அதேவேளையில், மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறியவர்களின் விகிதம் 19.8% ஆக இருந்தது. எனவே, அந்த வயதுப் பிரிவினரைப் பொறுத்தவரை, chatbots பயன்பாடு மனித நிபுணரை அணுகுவதற்கு இணையான நிலையை எட்டியுள்ளது; மேலும், AI பயன்பாடே வேகமாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்கள் இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. முறையான மதிப்பீடு இன்றி AI மற்றும் டிஜிட்டல் மனநலக் கருவிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் ஆஸ்திரேலியர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஆஸ்திரேலிய உளவியல் சங்கம் (Australian Psychological Society) எச்சரித்துள்ளது. நெருக்கடி கால கையாளுதல் மற்றும் பாதுகாப்பு குறித்த சர்வதேச மருத்துவக் கவலைகளையும் இது எதிரொலிக்கிறது. MyGov நிறுவனம் அண்மையில் நடத்திய ஒரு சிறு ஆய்வில், நம்நாட்டில் உணர்வுபூர்வமான ஆதரவுக்காக AI chatbotsகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கண்டறிந்துள்ளது. இருப்பினும், இது மனித நிபுணர்களை அணுகுவோரின் எண்ணிக்கையை இன்னும் முழுமையாக முந்தவில்லை என்று தற்போதைய சிறந்த தேசியத் தரவுகள் கூறுகின்றன. அதேவேளையில், மனநல நிபுணர்களை அணுகுவோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அடையாளம் மற்றும் நடத்தை சார்ந்த பயிற்சியாளரும் (identity and behavioural coach), உள்ளடக்கத்தை உருவாக்குபவரும், பேச்சாளரும், உளவியல் ஆலோசகருமான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.