பாவை விளக்கு - நாக விளக்கு - காமன் விளக்கு
காமத்துக்கு வடிவம் கொடுக்க முடியுமா?அது காட்சி வயப்பட்டதன்று. கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் உருவாகும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு.
கனவை கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை.அது கண்ணுள் பார்க்கவேண்டியது.
பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு தரைவந்து சேர்ந்ததைப் பற்றி என்ன நினைக்கிறாய்?
கொற்றவைக் கூத்தில் பாரிக்கு வேண்டியதை தேவவாக்கு விலங்கு எடுத்துக் கொடுக்கும்.இப்பொழுது அது தரைப்பகுதிக்கு வந்துள்ளதும் அதைச் செய்யத்தான்.