விகடனில் வந்த தொடர்- சு. வெ எழுதிய ஒரு தமிழ் வாழ்வியல் பதிவு. பொறாமை படும் வாழ்வை வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பதிவு. அதையும் மிஞ்சி பல இக்கால மக்களை காடறிய வைத்த நாவல்.
காதலும் வீரமும் கலந்த அறவாழ்வை வாழ்ந்த ஒரு மன்னன், அவனோடு வாழ்ந்த மாந்தரின் விசுவாசமும் அன்பும், அதை கண்டு மன்னன் பால் அன்பு கொள்ளும் புலவன், இதை கண்கள் கலங்க வாசித்த வியாழக்கிழமை காலைகள் பல.
மக்களை நாட்டைவிட்டு துரத்தும் மனிதர்களில் நாடோடி மக்களுக்காக நாட்டை உருவாக்கும் மனிதனின் கதை. பொறாமையில் நாட்டை அளிக்க முற்படும் மனிதருக்கும் அறத்தோடு போரிட்டு வென்ற ஒரு மக்கள் மன்னனின் கதை
முருகன் என்றும் என் விருப்ப தெய்வம். அவன் தமிழ் தெய்வம் என்பதால் வந்த பாசமோ தெரியவில்லை. ஆனால் அவனை காதல் கொண்ட மனிதனாக படைத்த காரணத்தினால் வேள்பாரி என் விருப்ப புத்தகமாக மாறியது.
மக்களை நாட்டைவிட்டு துரத்தும் மனிதர்களில், நாடோடி மக்களுக்காக நாட்டை உருவாக்கும் மனிதனின் கதை. பொறாமையில் நாட்டை அழிக்க முற்படும் மனிதருக்கும், அறத்தோடு போரிட்டு வென்ற ஒரு மக்கள் மன்னனின் கதை
இந்த கதையை என்னால் முடிந்த வரையில் உரைக்க போகிறேன். வாரத்திற்கு ஓர் அத்தியாயம் என நான் அனுபவித்த இன்ப வேதனையை தாங்களும் அனுபவித்து மகிழுங்கள். ஞாயிறு முதல் .. JULY 26, 2020..