Temples are the source of spirituality, wellness and the Tamil culture. It is considered as the cradle of a society. But, what is the state of those temples now? This video records the pain and anguish of a community on losing their place of worship to bureaucracy and ignorance. Now is the time to #FreeTNTemples.
தமிழ் மண்ணின் அடையாளம் நம் கோவில்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மோடு பின்னிப்பிணைந்து இருந்தவை நம் கோவில்கள். இவை மனித நல்வாழ்விற்கான சக்தி மூலமாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், இசை, நாட்டியம், ஓவியம், இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை உள்ளிட்ட அனைத்தையும் வளர்த்த நம் நாகரீகத்தின் தொட்டிலாய் விளங்கின. இத்துணை சிறப்பம்சம் தாங்கிய நம் கோவில்களின் இன்றைய நிலை என்ன? சித்தர்களும், முனிவர்களும், அரசர்களும், கலைஞர்களும், பக்தர்களும் பேணிக் காத்த நம் கோவில்களின் நிலை என்ன? பெரும்பாலான தமிழக கோவில்களின் நிலையின் முன்னோட்டமாய் இந்த காணொளியை வழங்குகிறோம்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices