1930களிலேயே பாரதியின் புலமை குறித்து அக்கால அறிஞர்கள் பத்திரிகைகள் வழியே நடத்திய இலக்கிய போர், பாரதி சங்கம் நிறுவி பாரதி படத்தை enlarge செய்து விழா எடுக்கப்பட்டது, ,முழு நேரமும் எழுத்து என்பதில் சமரசம் செய்யாத தமிழார்வம், திருவல்லிக்கேணி கடற்கரை அலையையும் விஞ்சிய வ ரா தலைமையிலான தமிழறிஞர் வாதங்கள் என பாரதி மறைந்த பிறகும் ஓயாத தாய் மொழியின் மறுமலர்ச்சி நடவடிக்கைகளை, கு ப ராவின் வாழ்க்கை குறிப்பினூடே எழுத்தாளர் சிட்டி இந்த முன்னுரையில் பகிர்ந்து கொண்டாலும், மொழிப்பற்றும், எழுத்துவன்மையும், உயர்ந்தகுணமும் பெற்ற கு ப ரா சொற்ப காலத்தில் காலமானது ஏற்றுக் கொள்ளமுடியாத உண்மையாகவே கால வெளியில் பதிந்துள்ளது.