சர்வ வல்லமைகளை பெறுவதற்கு இந்திரசித் செய்த நிகும்பலை யாகத்துடன் பரீட்சைகளை ஒப்பிடும் ஆசிரியர், 1940களிலேயே பிஏ பரீட்சைக்கு இறுதிராத்திரியில் படிக்கும் பழக்கத்தையும், புகைப்போட்டுக்கொண்டே பரபரப்புடன், குழு ஸ்டடியாக, நோட்ஸ்களை இரவல் வாங்கிப் படிக்கும் நுணுக்கமான சுவராஸ்யங்களையும் பட்டியலிடுகிறார்.. கல்லூரியை கலாசாலை என்றே குறிப்பிட்டாலும், அதற்கே உரித்தான ஆங்கில வார்த்தைகளை தூவிப்பேசும் உரையாடலை, உள்ளபடியே கையாண்டுள்ளதும்,பிரதர் பிரதர் என்றழைக்கும் வழக்கும் கூட இன்று வரை பொருந்திப்போவதும் அப்ளாஸ்... பரீட்சையை கிண்டி ரேசுடன் ஒப்பிட்டு பணம் கட்டும் சம்பவமாக நையாண்டி செய்தாலும், திட்டமிடலுடன் படிப்பவர்கள் சர்வீஸ் கமிஷன் வரை தேறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையையும் அன்றைய காலக்கட்டத்தில் வெளிப்படுத்தியது சிறப்பு. ஏனோ, முழு உரையாடலும் அதில் தொக்கி நிற்கும் நகையுணர்ச்சியும் நம்மவர்க்கு, நாம் upsc பரீட்சைக்கு தயாரான சர்வ சாமுத்ரிகா லட்சணங்களையும் நினைவூட்டுவதாக அமைந்து ஆசிரியரின் அற்புத எழுத்தாற்றலை வியக்க வைக்கிறது. Stop please என examiner பேப்பரை பிடுங்குவதும், இரண்டு மூன்று மதிப்பெண்ணுக்காக இறுதியில் நாம் கிறுக்கித்தள்ளுவதும் என அத்தனை யதார்த்தமான விவரிப்பு ... கேட்டுப்பாருங்களேன்....