Over 100 attendees from civil society, the world's leading tech companies, and 28 governments, including Australia’s Science and Technology Minister Ed Husic, gathered in England for the Artificial Intelligence Safety Summit initiated by the UK. This summit, the first of its kind hosted by a major international country, aimed to contribute to shaping the future direction of the technology. Suganya from Tamil Oli - 4EB in Brisbane elaborates on the summit's outcomes and highlighted the concerns shared by many experts regarding the power of AI. Produced by RaySel. - AI அல்லது Artificial Intelligence அல்லது செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் மனித குலத்திற்கு பெரும் நன்மைகளைக் கொண்டுவரும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது மனித குலத்திற்கு நாசத்தை ஏற்படுத்தும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பின்னணியில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் 28 நாடுகள் கலந்துகொண்ட செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் Ed Husic கலந்துகொண்ட இம்மாநாட்டில் பேசப்பட்ட கருத்துக்கள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பலனும், பயமும் குறித்து விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.