Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
VIsit : http://www.sumathygsmy.in/Blank Thoughts Few thoughts from a selfless mind A Motivational Podcast by Sumathy GnanasegarTamil Poems by Sumathy Gnanasegar blank thoughts for school students. ... more
FAQs about Tamil Poems | Blank Thoughts:How many episodes does Tamil Poems | Blank Thoughts have?The podcast currently has 61 episodes available.
June 01, 202011. இயற்கையின் ஈர்ப்பு | Natureநாம் பிறந்தபோதுபசித்தபோதுநம்தாய் நம்மைஅள்ளிஅணைத்தபோதுநம் பொன்னானவாழ்நாட்களில்தவழ்ந்து நடந்தபோதுதடுக்கிவிழுந்து எழுந்தபோதுஉடன்பிறப்புகளோடு உறவாடியபோதுபள்ளியில் படிக்கச்சென்றபசுமையான பொன்நாட்களில்வாலிபப் பருவத்தின்போதுஅன்பான உறவுகள்நம்முடன் வாழ்ந்தபோதுஎதிலும் நாட்டமின்றிநாட்களை நகர்த்தியபோதும்மலராத……..மனம்……நம் பாரதத் தாயின்சுவாசத்தையும்அவள் நமக்களித்த வான்கூரையையும்புல்மெத்தையையும் பறவைநண்பர்களையும்மலை, கானக, மழைநூல்களையும்காணும்போது மலர்வதேஇயற்கையின் ஈர்ப்பு....more2minPlay
June 01, 202010. நானறிந்த உண்மை | The Truth"உண்மைகள்"உங்களுக்குப் புரியாது.அதுவும்நான(ட)றிருந்த உண்மைஒன்றுண்டு -- அதில்உங்கள்மனம்என்றும் ஒப்பாது."போலிகள்"உங்களுக்குப் புரியும்.ஏனெனில்அதன்வடிவில் உங்களைநீங்களேபார்த்துக் கொள்ளலாம்.நானறிந்த உண்மைஒன்றுண்டு.உங்களுக்குக் கூறுகின்றேன்,உங்களுக்காகவே வாழ்கின்றேனென்றுவாரிசுருட்டிய தலைவர்களைஎண்ணி ஏமாந்தநீங்கள்,உங்கள்மனதை மலர்என்றுஎண்ணி எளிதில் மயங்கிவிடுகிறீர்கள்,உங்கள்இதயத்தில் குருதியோட்டம்உண்டென்று நம்புகிறநான்,உண்மைகளை உணருங்களென்கிறேன்.எழுச்சியை எழுப்ப வேண்டாம்முதலில்நீங்கள் எழுந்து நில்லுங்கள்.விழிப்பாயிருந்துஉறங்கும் உணர்வுகளைதட்டியெழுப்புங்கள்.முதலில் நாம்நல்நடைபயில்வோம் - பின்நாடே நடக்கும்நம் பின்னே!...more2minPlay
June 01, 20209. காரிருளிலும் கதிரவன் உதயமானால் | The Dawnபறந்து செல்லும்புஷ்பக விமானத்தினின்றும்புவியை முத்தமிடத்துடிக்கும்நம் பாதங்கள்,ஆகாயத்தாமரைகளைதரைக்கு கொணரும்ஆவேசத்தோடுஅலைபாய்ந்து விரியும்நம் கரங்கள்,விட்டில்பூச்சிகளைவீட்டுமுற்றத்திற்கு கொணரஆர்பரிக்கும் நம்ஆசைகளோடுமூடாமல் மலர்ந்திருக்கும்விரிந்தநம் கண்கள்,தென்றலைத்தொடக் காத்திருக்கும்நம் தோள்கள்,காரிருளில் கதிரவன்உதயமாகியதால்நமக்கென்று ஓர்உலகைஉருவாக்கிக்கொண்டுசிறைபட்ட தவறைஉணராதிருக்கும்……….நம்உணர்வுகள்....more2minPlay
June 01, 20208. தியாகம் | Sacrificeதியாகம் செய்வதாக எண்ணியெண்ணிதிடகாத்திரமான உள்ளங்கள்பலவேகாமல் வெந்து - மனதில்ரணம்வடிய நிற்கும்காட்சிகளை நாம்கதையிலும்திரையிலும் கண்டுவெதும்பியிருக்கிறோம் - ஆனால்நம்முன்னே ஓர்ஜீவனுக்காகதியாகம் செய்வதாக யெண்ணிநிதம்செந்நீரில் மிதந்துகொண்டிருக்கும்மனிதர்களை கண்டும் காணாதிருந்தால்அவர்கள் செய்வது தியாகமல்லதற்கொலை....more1minPlay
June 01, 20207. உயரத்திலிருக்கும் உன்னத உருவங்கள் | Noble Onesஉயரத்திலிருக்கும் உன்னத உருவங்கள்உலகில் வாழ்ந்தபோதுஉயர்வு பெற்றதில்லை.வாழ்ந்த நாட்களில் அவர்கள்வழி நடத்தியதைஇப்பொழுதுஅழித்துக் கொண்டிருப்பதையும்உணர்வதில்லை.அவர்கள் விட்டுச்சென்றதைஎட்டி எடுக்காமல்தட்டிக் கழிக்கும்தலைவர்களுக்கு தலையாய்மீண்டும் உயரத்திலிருந்த - அந்தஉன்னத உருவங்கள்ஏட்டில் மட்டும் ஏறிநிற்கும் அவர்தம்கொள்கைகள் வெளிவந்தால்,வழிநடத்தினால்நம் பாரதம்பாருக்கே ரதமாக மாறும்!...more1minPlay
June 01, 20206. கண்டகனவுகள் | Dreamsபுரண்டோடும் வெள்ளோட்டத்தில் தடுமாறுகின்றதுபுல்லுருவி -- ஒன்றுகரையைத் தொடத்துடித்துக் கொண்டிருக்கும்கப்பல்கள் -- இரண்டுஅசைந்தாடிச் செல்லும் நீர்தேரில்துடிக்கும்ஜீவன்கள் -- மூன்றுதுடித்துத்தவித்துக் கொண்டிருக்கும் ஜீவன்களின்கேள்விகள் -- நான்குவினாக்குரிய விடைகள் இருக்கும்விந்தையுலகங்கள் -- ஐந்துசலித்துப் பெறப்பட்ட விடைகளில்உள்ளசந்தேகங்கள் -- ஆறுஇவ்வாறும் சிலருக்குமட்டும் புரிந்தவைஇதன்விளக்கம் அவர்கள்மட்டும் அறிந்தவைபுரியாத புத்திமான்கள் என்னுடன்புரண்டோடும்எண்ணவெள் ளோட்டத்தில் பயணிக்கவேண்டும்....more1minPlay
May 31, 20205. சிலரின் வதங்கிய வாழ்க்கை | Wilt Lifeசிலரின் வதங்கிய வாழ்க்கைஎல்லையற்ற துயரத்தின் முடிவில்தானஎழில்மிக்க கவிதைகள் பிறக்கும்தாயின் கருவரையினின்றும் வெளிப்பட்டுதரையில் வீழும்போதே மனிதனைஇன்பமும் துன்பமும் சூழ்ந்து கொண்டுஇறுக்கத் துவங்கு கின்றனகூடவேஅன்புணர்ச்சி போன்ற உணர்ச்சிபிழம்புகள்மனிதனின் மனதைஎரிக்கத் துவங்குகின்றன.அன்பிற்கு பின்னேமனிதன் வாழ்வில்தோன்றும்அவலங்களுக்கு ஆட்பட்டு வதங்குகிறான்.Visit : http://www.sumathygsmy.in/...more3minPlay
May 29, 20204. தனிமை | Lonelinessதனிமைதனிமை யாருக்குசொந்தமானது?நாம் பூமியில் ஜனித்தஅக்கணமேநமக்கு சொந்தமானது.இந்த தனிமைநாம் தவழ்ந்து நடக்கதவித்த போதே நமக்கு சொந்தமானது.உறவுகளும் உற்ற நண்பர்களும் - நம்உறக்கத்தை கலைத்தபோதேநம்மோடு துணையாகிப்போனது.அன்பிற்காகபாசபந்த அணைப்புகளுக்காக அலையும்போதே ஆறுதல் அளிப்பதும் தனிமைதான்.சில போலிகளை உண்மைகளென்று நம்பினதிற்கு காரணமும் - இந்த தனிமைதான்.உண்மைகளை உணர்ந்து உள்ளமுடைந்துகண்ணீர்விடும் போதும் துணையானதுஇதேதனிமைதான்.கண்பார்வை படிப்படியாகபறிக்கப்பட்டுபார்வையிழக்கும்போதும்துணையாகபோவது - இந்ததனிமைதான்-ஆனால்அப்போது அந்த வயோதிக தனிமை நமக்குத்தனிமையாயிராது - ஏனெனில் இருளில்தனிமையின் கொடுமையைதான்ஏற்கனவே நாம் அன்னையின்அடிவயிற்றில் பல மாதங்கள் அனுபவித்துவிட்டுதானேவந்தோம்!Visit : http://www.sumathygsmy.in/...more2minPlay
May 28, 20203. என் சமூகம் | My Societyஎன் சமூகம்கூட்டத்தோடு வாழலாம், குழப்பங்களோடு வாழக்கூடாது - உன்னை முதலில் புரிந்துகொள். மற்றவர்களை பிறகு தெரிந்து கொள்ளலாம். சமூகத்தோடு வாழ முதலில் முயற்சி செய் - பிறகு சமூகத்திற்கு ஏதாவது செய்வது பற்றி யோசிக்கலாம்.Visit : http://www.sumathygsmy.in/...more1minPlay
May 26, 20202. நேசம் | Friendlinessநேசம்நேசத்தின் மறுஉருவம்தான் பாசம். பாசம் உள்ள மனிதர்தம் உறவு உண்மையான உன்னதமான பண்பை உருவாக்கும் பாலம். இப்பாலத்தில் பயணிக்கும் பயணம் முடிவில்லாதது. நேசத்தில் பயணிப்பவர்களின் தேசத்தில் நாசம் இல்லை. நாசம் மிகுந்த தேசத்தில் நேசம் இருப்பதில்லை. நேசமுள்ள மனிதர் கொண்ட தேசம் உருவாக்குவோம்! தேசியத்தில் நாசம் செய்வோரை உருவறுப்போம்- நம் நேசத்தால்.Visit : http://www.sumathygsmy.in/...more1minPlay
FAQs about Tamil Poems | Blank Thoughts:How many episodes does Tamil Poems | Blank Thoughts have?The podcast currently has 61 episodes available.