நல்லோர்கள் பெரியோர்கள் நடத்தும் செய்கை
நாட்டில் உள்ள துஷ்ட ஜனம் நகைத்ததாலே
பொல்லாத விஷக்கடிகள் வந்து புக்கிப்
பொன்மையுள்ள தேகமெல்லாம் குஷ்டம்போலே
செல்லாத விஷக்கடிகள் விஷகுன்மம் பாண்டு
தீராத கன்மவினை செய்த பாவம்
எல்லாருங் காணவிது புவியின்மீதே
இணங்கி வந்த கடிவிஷங்கள் இயம்பலாமே.
ஆரறிவார் பெரியோர்கள் செய்கை எல்லாம்
அம்புவியில் உபமானப் பொருள் அறிந்தால்
ஊரறியப் பேரறிய உலகமெல்லாம்
உடன் நகைத்துச் சிரிக்க என்று உலகப் பேய்கள்
சீரறியச் சிறியோர்கள் பெரியோர் தம்மை
சிரித்து நகைத்திடவெகு பாவத்தாலே
நேரறியா விஷக்கடிகள் போலே வந்து
நேர்ந்து பலவிதமான நீசந்தானே