"பாலுண்போம், எண்ணெய் பெறின் வெந்நீரிற் குளிப்போம்,
பகற்புணரோம், பகற்றுயிலோம், பயோதரமு மூத்த
ஏலஞ்சேர் குழலியாரே டிளவெயிலும் விரும்போம்
இரண்டடக் கோம், ஒன்றைவிடோம், இடதுகைற் படுப்போம்
மூலஞ்சேர் கறிநுகரோம், முத்த தயிர் உண்போம்
முதனாளிற் சமை தகறி யமுதெனினு மருந்தோம்
ஞாலந்தான் வந்திடினும் பசிக்குத்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேது வை நாமிருக்கு மிடத்தே"
தேரையர் பாடல்