தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் தொடர் மழை. இதில் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், பீகார் அரசியல் புயல் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அங்கு NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு முடிந்துள்ளது. ராகுல், தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு, செக் வைக்கக் கூடிய வகையில் யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களிலிருந்து வேட்பாளர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு என இறங்கியாடும் நிதிஷ்குமார், அமித் ஷா கூட்டணி.
இந்தப் பக்கம், இந்தியா கூட்டணியில் முழுமை அடையாத தொகுதி பங்கீடு, போட்டி வேட்பாளர்கள் களமிறக்குதல் என தேஜஸ்வி யாதவ் ராகுல் இடையே முட்டல், மோதல் தீவிரம். 'Friendly Fight' என வர்ணித்தாலும் NDA-க்கு சாதகமான சூழலை இவர்களே உருவாக்குகிறார்கள் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் மூவ். பாஜக-வுக்கு ப்ளஸ் அதுவே மகா கூட்டணிக்கு ஷாக்காக மாறுகிறது என்கிறார்கள்.
பீகார் தேர்தலை உற்று நோக்கும் தமிழ்நாடு. எகிறும் பரபரப்பு.