Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Nutpam -Podcast:How many episodes does Nutpam -Podcast have?The podcast currently has 20 episodes available.
April 13, 2025கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்ஒரு வழியாக.. சந்தேகத்தை இடவலமாக அதக்கி வைத்திருக்கும் கன்னக் கதுப்பில் ஓராயிரம் அர்த்தக் குமைச்சல் ஊறுகிறது எதுவும் பயன்படப் போவதில்லை நீயும் நானும் ஒப்புக்கொள்ள விரும்பும் சமரசத்தை தொலைத்துவிட்டேன் பழியை எண்ணி மனதை அஞ்சி பெருங்காட்டின் இடைவழியில் சரித்து உருட்டித் தள்ளும் பாதாள அடுக்குகளில் மோதி பிளந்தது யோசனையின் பின்மண்டை தலைகீழ் கோணத்தை நேர்ப்படுத்திக்கொள்ள நான் எனக்கு ஒரு தூக்க மாத்திரையைப் பரிந்துரை செய்கிறேன் கனவுகளின் இரகசிய கதவுகள் திறந்ததும் வெளியேற வேண்டியது முதலில் தன்மானம் அல்ல […]...more4minPlay
April 13, 2025ரேவா கவிதைகள் இசையும் காலம் மனமெங்கும் அலையத் தொடங்கும் யோசனையின் கால்கள் ஒவ்வொன்றும் காலத்தின் வெவ்வேறு தொடர்ச்சிக்கு இழுத்துப்போகிறது சொல் முந்த வழித் திறந்த காலம் இறவாப் பொழுதாகிக் கனக்கிறது நிகழும் மௌனத்தை எடையேற்றி நியாபகத்தின் பொத்தலில் நிறையும் கணக்கற்ற நானுக்கோ தந்துதவ நல்ல சொல் தேடித் தேடி ஓடுகின்ற கால்கள் ஒயுமிடம் மாயும் மனம் எங்கு உண்டு நானின் வளையா நான் மூங்கில் மனம் உடைத்துத் துளையிட்ட விசையில் இசையும் பொழுதால் நிகழ்கிறது ஓயும் காலுக்கான காத்திருப்பு.. […]...more3minPlay
April 13, 2025வருணன் கவிதைகள்வாழ்க்கை போலொரு விளையாட்டு விதிகளற்ற விளையாட்டு வாழ்க்கையைப் போல இருக்கும். சமன்செய் நீளங்களை ஆழங்களை அகலங்களை நீட்டல்களை குறைத்தல்களை கணிக்கிற பயிற்சியே அன்றாடத்தின் அதிமுக்கிய பணி சரி,எதனோடு அல்லது எவரோடு சமன்செய்தல்? ஷூ… சும்மாயிரு. தொணதொணக்காமல்… அலுத்துக் கொள்ள என்ன இருக்கிறது? சலிப்பின் கசப்பேறிய பொழுதுகளை மூடி வைத்திட இழுத்து வந்து கொண்டே இருக்கிறது அந்தி கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு அச்சு எதுவெனும் ரகசியம் தெரியாத (ரகசியமாம் பெரிய…) ஆனால் அதற்குள் கச்சிதமாய் பொருந்திக் கொள்கிற […]...more4minPlay
April 13, 2025மேகலா கருப்பசாமி கவிதைகள்காரணம் ஓடியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தமே களைப்பைத் தருகிறது. விண்மீன்களை ஓடாக்கி கூரையிழந்த வீட்டை மாளிகையாக்கலாம்; தேன் வேட்டைக்கு பட்டாம்பூச்சியை துணையாக்கலாம். உலகத் திரையில் தினமொரு நாடகம் அரங்கேறுமெனில் இடைவேளைக்காக இடைவெளி கோரும் காதலின் இறுதிக்கட்டதைகப் பார்க்கப் பார்க்க துண்டிக்கப்பட்ட மின்சாரத்தின் மீது ஏன் இத்துணை ஆதங்கம் ! எவர் தூக்கத்திற்கும் ஊறு விளைவிக்காமல் ஓடும் அர்த்த ஜாம எண்ண இரயில்களின் கடைசி பெட்டி வாசகம் “கால்கள் இல்லா விடினும் ஓட்டம் உண்டு” நீ பூமிக்கு […]...more3minPlay
April 12, 2025தடுத்தாட்டும் நெருடல்கள் ~ பாந்தப் புரிதல்.தடுத்தாட்டும் நெருடல்கள். ஆகப்பெரும் வெளியில் பயணப்பட்டு வந்த பிறகு. தென்பட்ட பூமியில். அநேக ஆச்சரியங்கள் இருந்தது. இவ்வளவு நேர்த்தியான கிரகத்தை இதற்குமுன் கண்டதில்லை. மேலிருந்து கீழ் நோக்கிய பார்வைக் கிட்டினால். இவ் வழ்க்கை இரசித்தலின் பொருட்டாக. நீங்களும் சொர்க்கவாதிதான். இத்தனை மதுரமாக நீர்ப்பிரவாகம். சூழ்ந்து கொட்டும் அருவிக்காக. குன்றுகளெனும் மலைகள். மாபெரும் மலைப்புதான் பூமியில். பல்லுயிரிகளின் வாழ்வின் பாந்தம் வழி தவறி வந்துவிட்டது. சரியெனத்தான் சந்தோசம் பூத்தது. உண்ணலின் சுழற்சியே பேரதிசயமென வியக்கும் வேலையில். யாரது… இறைவனையொத்த […]...more3minPlay
February 25, 2025கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்என்னிடமிருந்தும் இல்லாமல்.. துயரம் அழுந்தும்போது தோள்கள் இளகி வாகாக ஒரு நினைவைத் தாங்கிக் கொள்கின்றன நிபந்தனைகள் எதுவும் அவசியமாகவில்லை ஒரு நேர்க்கோட்டின் நடுவழியில் பதற்றத்தோடு உதறிச் செல்ல வைராக்கியம் மிக்க சொற்களை கைவசம் வைத்திருக்கிறேன் புடைத்து வீங்கிய சூழ்நிலைகளின் அசௌகரிய இடர்களை மீறி உருண்டு முனை மழுங்கிய அவமானங்களின் வெப்பம் அமிழ்கிறது தன்னிரக்கத்தின் குமிழ் உடைய மெல்ல மெல்ல தனிமையின் அடிமடியில் இன்னுமோர் முறை நீயுன்னையே அழைத்துப் பேசியிருக்கலாம் விடுபட்ட பாதையின் திசையில் நைந்து கிடக்கிறது ஒரு […]...more5minPlay
February 25, 2025ரேவா கவிதைகள்குரல் பாதை நினைத்துக்கொள்ளும் தருணங்களிலிருந்து தப்புகிற வலிக்கு நுழைத்துக் கொண்ட மலையின் வழி களைத்து வருகிறது ஒரு பெரும் குரல் எதிரொலி எதிர்பட சுமக்கும் காற்றுக்குள் தட்டுப்படுகிறது உன் அசைவுக்கு இசையா மௌனம் மரி மூளை மடிப்பின் முனை மடங்க பழுப்பேறியிருக்கிறது உன் பாத்திரம் யாசகா ஒரு மந்திரமென என்னை உச்சரி வரம் தர வளர்க்கிற காளியின் உரு என் பிச்சை பொருள் சேர் பிறப்பில் நழுவும் துளிக்குள் வதம் செய்ய இடுகிறேன் ஒரு சொல்லை...more1minPlay
February 25, 2025வருணன் கவிதைகள்01 வீடு திரும்பல் சூன்யத்துள் அலைந்து திரிந்து அலுத்த சுடர் விளக்கேற்றும் போதெல்லாம் திரி நுனியில் இளைப்பாற அமருகிறது பசலையில் தவிக்கும் சூன்யம் காற்றைத் தூதனுப்ப அலைந்து அலைந்து சமரசம் இவர்களின் ஊடலுக்கிடையில் அலைவுறுகிறோம் நானும் அறையும் சகலமும் 02 அற்பப் பிறவி மென்தூரலாய்த் துவங்கி அடைமழையின் சாயலை வரிந்து கொண்டபோது ஈரமாதலுக்குத் தயங்கி எதிரெதிராய் அண்டி நின்றிருந்த அத்தனை கண்களும் நிலை கொண்டது சாவதானமாய் நனைந்து கொண்டே நடந்த வீதியோர நாயொன்றின் மீது இருபுறமும் அப்போது […]...more2minPlay
February 25, 2025காதல் கோலங்கள்1 ஒளிந்து விளையாடுவது எனக்குக் கொஞ்சம் பிடிக்கும் உனக்கு ரொம்பப் பிடிக்கும். நாமிருவரும் நம் இருப்பில் இல்லாமல் சிலகாலம் தலை மறைவாகிவிடுவோம். இடைப்பட்ட காலத்தில் திட்டிக்கொண்டே என்னுடைய உருவத்தை உன்னுடைய மனச்சுவற்றிலும் உன்னுடைய உருவத்தை என்னுடைய மனச்சுவற்றிலும் தீட்டிக் கொள்வோம். வண்ணமும் எண்ணமும் வறண்டுபோகும் நாளில் இருப்பைத் தேடி நாய்போல அலைவோம். இருண்ட வெளியிலிருந்து தட்டுத் தடுமாறி இருப்பைக் கண்டடையும்போது உயிர் பெறட்டும் அவ்விரு சித்திரமும்! 2 குடிசைக்குத் தீ மூட்ட கூட்டமொன்று வருவதை மூத்தோர் எச்சரித்தால் […]...more4minPlay
February 25, 2025முக்கோண வீடுஉயிரோட்டமாய் ஒரு சிசுப் பிண்டம் நீ பாதுகாக்கும் பொருட்டு உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒர் வஸ்து… நீயே குழந்தை யாதலால் உன் வாகனத்திலிருந்தது தூக்கி வீசப்படுவதாய் கனாக் கண்டு அதிர்ந்து எழாதே! துன்பம் தவிர்க்கப்பட வேண்டியது.. அனுபவிக்கப்பட வேண்டியதல்ல.. விடியற் காலை துயிலெழ அருகதை யற்றவன் நீ உன்னிடத்திலிருந்து நீ செய்யக் கூடியதை செய்த தாய் மரணித்த பின் அவள் மடியில் சாய்ந்து கனவில் கிடப்பதாக மூடிய இமைகளுக்குள் கண்ணீர் சுரக்காதே! துன்பம் உழன்று வாடப்பட வேண்டியதல்ல.. தவிர்க்கப்பட […]...more2minPlay
FAQs about Nutpam -Podcast:How many episodes does Nutpam -Podcast have?The podcast currently has 20 episodes available.