தஞ்சைக்குப் போய் உத்தமசோழரைக் கேட்கலாமா." என்று சொல்ல, "இல்லை. தஞ்சைக்குப் போகும் முன் நம்பியாண்டார் நம்பியைப் பார்த்துவிட விரும்புகின்றேன். இரண்டுமுறை முயற்சித்தும் இவரைச் சந்திக்க முடியவில்லை. எங்கெங்கோ வெவ்வேறு ஊர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவரைப் போய் சந்தித்துவிட்டு பிறகு ஊருக்குப் போகலாம் என்றிருக்கிறேன். வந்தியத்தேவரே. பதட்டமான என் தமையன், எவ்வளவு மோசமாக மரணமடைந்திருக்கிறான் பார்த்தீரா. ஒன்று புரிகிறது. இனி இந்த அருண்மொழி எது குறித்தும் பதட்ட மாக மாட்டான். எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், எப்படிப்பட்ட எதிரிகள் நின்றாலும் மிக அமைதியாக யோசிக்க எனக்கு உள்ளுக்குள்ளே ஒரு தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இது அனுபவ பாடம். என் தமையன் பட்ட அனுபவத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்." அடிக்குரலில் இளவரசர் நிதான மாகச் சொன்னார். மறுபடியும் அவர் கண்களில் நீர் கட்டி மெல்ல கன்னம் இறங்கியது.